Thursday, July 4, 2013

பாலிவுட் நடிகர் ஆனார் பரத்



ஹீரோயின்கள் மாதிரியே இப்போது ஹீரோக்களுக்கும் இந்தி மோகம் அதிகரித்து விட்டது. கமல், ரஜினி, மாதவன், சித்தார்த்,போன்ற நடிகர்கள் ஏற்கெனவே இந்திக்கு சென்று விட்டார்கள். விக்ரமும், சூர்யாவும் போன வேகத்தில் திரும்பி விட்டார்கள். இந்தியில் மாதவன் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி படத்திற்கு இந்தியில் எப்போதும் தனி மவுசு உண்டு.

தற்போது தனுஷ் நடித்த இந்திப் படம் ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) பெரிய வெற்றி பெற்றுவிட்டதால் இங்குள்ள இளம் நடிகர்களுக்கு இந்தி ஆசை வந்து விட்டது. இந்தியில் நடிப்பதை ஒரு பெரிய புரமோஷனாக நினைக்கிறார்கள். அடுத்து இந்திக்கு சென்றிருப்பவர் பரத். தற்போது தமிழில் கில்லாடி, 555 படங்களை மட்டுமே வைத்திருக்கும் பரத் இந்தி வாய்ப்பு வந்த கதையை இப்படிச் சொல்கிறார்.

"ஒரு நாள் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. 555 படத்தின் ஸ்டில், விளம்பரகளை பார்த்ததாகவும் உடனடியாக மும்பை வரமுடியுமா என்று கேட்டார்கள். மும்பை போனேன் அழைத்தவர்களுக்கு என்னை பிடித்து விட்டது. எனக்கு ஜாக்பாட் அடித்தது. படத்தின் பெயரும் "ஜாக்பாட்"தான். வைக்கிங் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. பூம், பாம்பே பாய்ஸ் படங்களை இயக்கிய கெய்சாத் குஸ்தாத் இயக்குகிறார். 7 பேர் இசை அமைக்கிறார்கள். சச்சின் ஜோஷி, நஸ்ருதின் ஷா, சன்னி லியோன் நடிக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இருந்து கோவாவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ் பையனாக நடித்திருக்கிறேன். என்றார் பரத்.