Sunday, April 28, 2013

பாலியல் குற்றங்கள் : மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி வலியுறுத்தல்


மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுத்து பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மாணவிகளும், ஏழைப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் செய்தி பரவலாக வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் பெயருக்கு வழக்கு மட்டும் பதிவு செய்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்பன உள்ளிட்ட 13 அம்ச திட்டங்களை தமிழக அரசு அறிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, அந்த அறிவிப்புகள் என்ன வாயிற்று என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source ; Puthiyathalaimurai