Monday, April 15, 2013

90 வயது மூதாட்டியை கற்பழித்த கொடூரம்!


பஞ்சாப்பில் 90 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மண்ட் மொட்லா கிராமத்தில் வசித்து வந்த 90 வயது மூதாட்டி ஒருவர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கையில் ஹலர் ஜனார்தன் பகுதியை சேர்ந்த ரன்பீர் சிங் ( 50) அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் ரன்பீர் மீது வழக்கு பதிவு செய்து அவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.