Wednesday, April 10, 2013

‘அஞ்சலியும் என் மகள் மாதிரித்தான்’ : சித்தி


நடிகை அஞ்சலியோ, களஞ்சியம், தனது சித்தி இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், தனது சொத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்றும் கண்ணீர் விடுகிறார்.
மு.களஞ்சியமோ தனது நற்பெயருக்கு அஞ்சலி களங்கம் சேர்க்கிறார் என்கிறார். அஞ்சலியின் சித்தி, அஞ்சலி எனது அக்கா மகள் எனக்கும் மகள் போலத்தான், என்கிறார்.

டாலிவூட்டின் டாப் செய்தியாகிப்போய்விட்டது அஞ்சலி கிளப்பிய சர்ச்சை. வீட்டில் டார்ச்சர் தாங்க முடியாமல் வெளியில் வந்துவிட்டேன் என வெளிமாநிலத்திலிருந்து பேட்டி கொடுத்தார் அஞ்சலி. அவ்வளவு தான், ஹாட் டாபிக் ஆனது அஞ்சலி குடும்ப விவகாரம்.

அஞ்சலியின் சித்தி அஞ்சலிபற்றி பேசும்போது, “அஞ்சலிக்கு பாதுகாப்பாகத்தான் நான் இருந்தேன். அவளது சொத்துக்களை நான் ஒன்றும் அபகரித்துக் கொள்ளவில்லை. அவள் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் இன்னும் மூன்று உள்ளன. சிங்கம் 2 படத்தில் ஒரு நடன காட்சி பாக்கி உள்ளது. களஞ்சியத்துடன் அவள் நடித்து கொண்டு இருந்தாள். இன்னும் ஒரு படத்தில் சில காட்சிகள் நடிக்க வேண்டி உள்ளது.

Source : yarlosai.com