இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த். அவர் இயக்கிய ‘மாற்றான்’ படத்துக்குப் பின் ரஜினிக்கு கதை சொல்லி ஒகே ஆகிவிட்டது.
‘கோச்சடையான்’ முடிந்ததும் ரஜினி நடிக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். அதன் பிறகு, ரஜினி நடிக்கவில்லை.
அவருக்கான கதைதான் என்றாலும் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் அவர் நடிக்க மாட்டார் என்றார்கள். அப்புறம், நடிகர் ஆர்யாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்குகிறார் என செய்தி வெளியானது.
தற்போது அதுவும் இல்லை என்றும், இறுதியாக தனுஷ்தான் நடிக்கிறார். என பேச்சு அடிபடுகிறது. இதுதான் உண்மை என்பது போல், தனுஷும் தனது வலைதளத்தில் அடுத்து நான் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆக, இதுதான் உண்மை தகவலாக இருக்கிறது.