Wednesday, March 6, 2013

இயக்குனர் மீது ஆர்யா திடீர் பாய்ச்சல்



இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் நடிப்பதாக சொல்வதை மறுத்துள்ளார் ஆர்யா. அருண் விஜய் நடித்த தடையற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்
திருமேனி. இவர் அடுத்ததாக த்ரில்லர் கதையை படமாக்குவதாகவும் படத்தில் 
ஹீரோ போலீஸ் வேடம் ஏற்பதாகவும் கூறப்பட்டது. இதை உறுதி செய்த மகிழ் திருமேனி, ஆர்யாதான் இப்பட ஹீரோ என அறிவித்தார். இது பற்றி அறிந்த ஆர்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் மகிழ் திருமேனி என்றால் யார்? அவர் இயக்குனரா? என கேட்டிருக்கிறார் ஆர்யா.

இது பற்றி ஆர்யா கூறும்போது, தயாரிப்பாளர் ஒருவர் புது படம் பற்றி பேசினார். ஆனால் அது யாருடைய படம் என்பது தெரியவில்லை. மகிழ் திருமேனி படத்தில் நான் நடிப்பதாக சொல்வதில் உண்மையில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரிடம் கதை கேட்க நேரம் ஒதுக்கியிருப்பதாக சொல்வதும் புரளிதான். இப்படியெல்லாம் ஏன் புரளி கிளப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போதைக்கு நடித்து வரும் படங்களுக்கு தேதி கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது என்றார்.

Source : www.dinakaran.com