Friday, April 12, 2013

மன்மோகனுக்கு அளித்த விருந்தில் நரி நுழைந்ததால் பரபரப்பு


பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலின் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டது, திடீரென அங்கு நரி நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர், வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருந்து தொடங்குவதற்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த விருந்து கூடத்திற்குள் அழையா விருந்தாளியாக ஒரு நரி நுழைந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். ஆனால் அந்த நரி சில நிமிடங்களில், அங்கிருந்து அமைதியா தானாகவே அங்கிருந்து வெளியேறி சென்றது.