இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர், வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்து தொடங்குவதற்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த விருந்து கூடத்திற்குள் அழையா விருந்தாளியாக ஒரு நரி நுழைந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். ஆனால் அந்த நரி சில நிமிடங்களில், அங்கிருந்து அமைதியா தானாகவே அங்கிருந்து வெளியேறி சென்றது.
Source : tamil.webdunia.com