Sunday, April 28, 2013

அனுஷ்காவின் ஆசை நிறைவேறியது


முன்பெல்லாம், சொந்த குரலில் பேசத் தெரிந்த நடிகையாக இருந்தால் மட்டுமே, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால், பிற
மாநிலங்களிலிருந்து வரும் நடிகைகள் கூட, தமிழை சரளமாக பேச கற்றுக் கொண்டு, திறமையாக நடித்தனர். இப்போது, அதெல்லாம், ஒரு கனாக்காலம்
ஆகி விட்டது. பார்ப்பதற்கு, அழகாக இருந்தால் போதும், அவர், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நடிக்க வைத்து விடுகின்றனர். அப்படியும், சில நடிகைகளுக்கு, தமிழ் படங்களில், சொந்த குரலில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இவர்களில், அனுஷ்கா குறிப்பிடத் தக்கவர். பலரிடமும், வாய்ப்பு கேட்டும், அவருக்கு சற்று, கரகரப்பான குரல் என்பதால், அவரை பேச அனுமதிக்கவில்லை.இப்போது, "இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வரும், அனுஷ்கா, சொந்த குரலில் பேசும் ஆசையை, இயக்குனர் செல்வராகவனிடம் கூற, எதிர்பாராத வகையில், அவரும், உடனே, ஓ.கே., கூறி விட்டாராம். இதனால், தமிழில், முதல் முதலாக சொந்த குரலில் பேசப்போகும் குஷியில் இருக்கிறார், அனுஷ்கா.