உத்தரகண்டில் பேய் மழை பெய்ததில், ஏராளமானோர் தவிக்கின்றனர். இவர்களை, ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டுள்ள மாநில மக்களுக்கு தெம்பூட்டும் வகையில், முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான, ஆளும் காங்கிரஸ் அரசு, நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. இதில், காங்., தலைவர் சோனியா மற்றும் முதல்வர் பகுகுணாவின் படங்கள், சிரித்த முகத்துடன் இடம் பெற்றுள்ளன.
அதில், "பேரிடரான இந்த நேரத்தில், அரசு என்றும் உங்களுடன் இருக்கும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.சோகமான இந்த நிகழ்விற்கு அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்களில், சிரித்த முகத்துடன் காங்., தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.உத்தரகண்டில் சிக்கித் தவித்த, குஜராத் மாநில மக்களை மீட்க சென்ற மோடியை, விளம்பரம் தேடுகிறார் எனக் கூறிய, காங்., தலைவர்கள், "சிரித்த முக நோட்டீஸ்' மூலம் விளம்பரம் தேடுவதை, என்னவென்று கூறுவது என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்