Thursday, July 18, 2013

கவிஞர் வாலி சென்னையில் காலமானார்


பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.


பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.