Wednesday, July 3, 2013

பாலகிருஷ்ணாவுடன் நடிக்க மறுத்ததேன்! நயன்தாரா விளக்கம்


த்ரிஷா, அசின் வரிசையில் இப்போது நயன்தாராவும் மார்க்கெட்டில் இருப்பதில் வயதான கதாநாயகிதான். என்றாலும், அவருக்கு இளவட்ட நடிகர்களின் படங்களாக கிடைத்திருப்பதால், இன்னமும் தனது யூத் இமேஜை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். அஜீத், ஆர்யா, ஜெயம்ரவி, உதயநிதி என்று தமிழில் நடிப்பவர், தெலுங்கிலும் இளவட்டங்களுடன் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். ஆனால், அப்படத்தை தடாலடியாக மறுத்து விட்டாராம் நயன்தாரா. அவருடன் அப்படத்தில் சீதை வேடத்தில் நடித்தபோதுதானே உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது. நந்தி விருதெல்லாம் வாங்கினீர்கள் என்று கேள்வி எழுந்தபோது, அப்போது நான் முதல் ரவுண்டில் இருந்தேன். ஆனால், இப்போது இரண்டாவது ரவுண்டில் இருக்கிறேன். இந்த நேரத்தில் முதிர்ச்சியான நடிகர்களுடன் நடித்தால், என்னையும் அந்த பட்டியலில் சேர்த்து விடுவார்கள். அதன்பிறகு இளம் நடிகர்களுடன் நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காது. அதனால்தான், என்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அவரது படத்தை தவிர்க்கிறேன். மற்றபடி பால கிருஷ்ணா ரொம்ப நல்ல நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என் மனதளவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சூழ்நிலைதான் என்னை தடுக்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.