நாடகங்களில் நடித்தவர்கள் பல பேர். அவர்களில் ஒருவர் தான் எம்.ஜி.ஆர்., சிவா. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சொந்த ஊராக கொண்ட இவர், சென்னையில் தங்கி மேடை நாடகங்களிலும், கச்சேரிகளிலும் எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்தார். வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்தில் ஹீரோவாக கூட நடித்தார்.
இந்நிலையில் சிவா, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்து வந்தார். இந்நிலையில் நோய் முற்றி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று(மே 4ம் தேதி) மரணம் அடைந்தார். மறைந்த சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான பழனியில் அடக்கம் செய்யப்படுகிறது.