Friday, May 3, 2013

ஒருவர் மீது இருவர் சாய்ந்து - திரை விமர்சனம்


கணேஷ் (லகுபரன்) எப்பொழுதும் நண்பர்களுடனும், காசுடனும் அலையும் இளைஞன். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்
சவிதாவிடம் (சுவாதி), கணேஷ் காதல் மழை பொழிய, அவன் காதலை ஏற்றுக் கொள்ள சவிதா போடும் ஒரே முக்கிய நிபந்தனை... தன்னோடு, தன் உயிர்த்தோழி கவிதாவையும் (சானியா தாரா) கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான்! இலவச இணைப்பாக வரும், முகமறியாத கவிதாவை ஏற்றுக் கொள்ள மறுத்து, சவிதாவையும் துறந்து, ஐதராபாத் போகும் கணேஷை சந்திக்கிறாள் ஒரு பெண். அவளேடு கணேஷூக்கு காதல் என லாஜிக்கில்லாமல் பம்முகிறது படம். கடைசியில் தன் இரண்டாவது காதலிதான் கவிதா என்பதும், சவிதா-கவிதா நாடகமே இது என்று அறியும் கணேஷ் என்ன செய்தான்? என்பது கொழ கொழ க்ளைமாக்ஸ்.

போக்குவரத்து போலீஸ் போல், முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தூசி பறக்கிறது படத்தில்! "லவ் டுடே" ‌பாலசேகரன் இன்னமும் டுடேக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. எந்த விஞ்ஞானியாவது கால இயந்திரத்தில் அவரை ஒரு இருபது வருடங்கள் முன்னே அழைத்து வந்தால் தமிழ் திரையுலகம் நன்றி கூறும்!

ஒருவர் மீது இருவர் சாய்ந்து பட காட்சிகள்