Saturday, August 9, 2014

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் - இயக்குநர் சீமான்

தம்பி விஜய் அரசியலுக்கு வரவேண்டும்... தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.
அரசியலில் ஆர்வமில்லை என்று கூறிக் கொண்டே, மறுபக்கம் தனது அரசியல் நுழைவுக்கான அடிப்படை வேலைகளைச் செய்து வருகிறார் நடிகர் விஜய்.
மதுரை விழாவில்
மதுரையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தனக்குத் தானே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டிக் கொள்ள விஜய் ஏற்பாடு செய்துள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் சீமானை அழைத்துள்ளார். அவரும் விழாவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீமான் ஆதரவு
ராஜபக்சே கூட்டாளி லைகா நிறுவனம் தயாரிப்பில் விஜய்யின் நடித்துள்ள கத்தி படத்துக்கு தன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அடுத்து விஜய்யை அரசியலுக்கு அழைத்து பேட்டியும் அளித்துள்ளார்.
அரசியலுக்கு வா தம்பி
அதில், "தமிழகத்தை ஒரு தமிழன் ஆள வேண்டும். அதற்கு மக்களிடம் அறிமுகமாகியிருக்கும் தம்பி விஜய் போன்ற இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும். அதனால்தான் அவரை எங்களோடு இணைந்து செயல்பட அழைத்தேன். அவரும் இது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இனமானம் - வருமானம்
இனமானத்தை விட வருமானத்தைத்தானே சினிமா புள்ளிகள் பலரும் முக்கியமாகக் கருதுகிறார்கள். தம்பி விஜய் இதிலிருந்து மாறுபட்டவராக இருப்பார் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், அவர் என்ன முடிவெடுப்பார் என எனக்குத் தெரியாது,'' என்று கூறியுள்ளார் சீமான்.